முதலமைச்சர் விஜய், தனது வாழ்க்கையே விவசாயிகளுக்காக என கூறியதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன் குறித்து திமுக பேசவில்லை” என விமர்சித்தார். கடந்த ஆட்சியில் ரேஷன் அரிசியின் தரம் குறைவாக இருந்தது. ரேஷன் அரிசியை நாம் யாராவது சாப்பிட்டு இருப்போமா?. இதுகுறித்து முதலமைச்சரிடம் எடுத்துக் கூறியபோது, சன்னரக நெல்லுக்கு ரூ.289-ம், பொதுரக நெல்லுக்கு ரூ.159-ம் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க அறிவித்ததார்” என்றார்.
