Skip to content
Home » குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

  • by Senthil

திருச்செந்தூரில் ஓன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று சேலத்தை சேர்ந்த பாண்டியன் திலகவதி தம்பதியினர் கோவை பூண்டி பகுதியில் ஆலாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது திலகவதி மயக்கம் போட்டு விழுந்ததாகவும் அவரை பூலுவம்பட்டி பகுதியில் உள்ள நகர் நல மையத்திற்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாக கூறப்பட்டது.

இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டு குற்றவியல் நீதிமன்ற நடுவர் சந்தோஷ் குமார் முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதில் வெள்ளை நிறமான விஷமருந்து சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆலந்துறை காவல் நிலையத்தில் திலகவதி உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தங்களை பிடித்து விட்டால் இருவருமே விஷ மருந்து சாப்பிட்டு உயிர் இழந்து விடலாம் என்று கூறி நிலையில் நீ மட்டும் இருந்து விட்டாய் என்று கண்ணீர் மல்க பாண்டியன் அழுததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!