Skip to content
Home » ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்…… முகூர்த்த கால் நடப்பட்டது

  • by Senthil

ஸ்ரீரங்கம் அருள்மிகு  ரெங்கநாதசுவாமி  கோயிலில்  சித்திரை தேரோட்ட விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று மதியம்  சித்திரை தேர் நிறுத்தப்பட்டுள்ள  வெள்ளைக்கோபுரம் அருகே  தேரோட்டத்திற்கான முகூர்த்தகால் நடும்  நிகழ்ச்சி  நடந்தது. சுந்தர்பட்டர் உள்பட பட்டர்கள், கோவில் அதிகாரிகள் இதில்  கலந்து  கொண்டனர்.    சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தகால் நடப்பட்டது.  முகூர்த்தகால் விழாவையொட்டி  கோவில் யானைகள்  லட்சுமி, ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய்பட்டிருந்தது.6ம் தேதி தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு  அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!