Skip to content
Home » நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

நாளை எதிர்கட்சியினர் ஆலோசனை… பாட்னா புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேகொள்ளப்படுகிறது. பீகார் மாநிலம் பாட்னாவில் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சரத்பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடப்பதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12ம் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்ததால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.   இதனையடுத்து அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை பாட்ஜா புறப்பட்டு சென்றார். அவருடன் எம்பி டிஆர் பாலு உடன் சென்றார். ந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தனது கருத்துக்களை பதிவு செய்வதுடன், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!