Skip to content
Home » மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

  • by Senthil

மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வந்தார். அங்கு நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், கே. என் நேரு,  எ.வ.வேலு, ஐ. பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், மூர்த்தி, மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!