Skip to content
Home » தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

தர்மபுரி விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்……… சேலத்தில் உற்சாக வரவேற்பு

  • by Senthil

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்துதனி விமானம் மூலம் இன்று காலை சேலம்  காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.  அங்கு அவருக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அமைச்சர்கள் கே. என். நேரு,  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மற்றும் பார்த்திபன் எம்.பி,   மாவட்ட செயலாளர்கள்  செல்வகணபதி,   எஸ்.ஆர். சிவலிங்கம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ  உள்பட பலர் முதல்வரை  வரவேற்றனர். சேலம் கலெக்டர்  பிருந்தாதேவி  முதல்வருக்கு புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார்.

வரவேற்பு முடிந்ததும் கார் மூலம் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி விழாவுக்கு புறப்பட்டு சென்றார்.  இந்த விழாவில் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்த குறும்படம் திரையிடப்படுகிறது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றுகிறார். தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்தியநாதன், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!