Skip to content
Home » விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் இறுதி மரியாதை

  • by Senthil

பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பி  பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் (98) வயது மூப்பு காரணமாக, நேற்று காலை (செப்டம்பர் 28) 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், முதல்வர், கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதனின்

அறக்கட்டளையில் அவரது உடல், இன்று (செப். 29) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் பேசியதுடன் ஆறுதலும் தெரிவித்தார்.

நாளை நண்பகல் 12 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!