Skip to content
Home » பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

பேராசிரியர் பிறந்தநாள்…. திருவுருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Senthil

திமுகவின் நீண்டகால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கு இன்று 101வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.  இந்நிகழ்வில் திமுக மக்களவை தலைவர் டி.ஆர்பாலு, எம்பி ராசா உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். இதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் X-தளத்தில் கூறியதாவது….. யாரோ சிறியர் நரியர்
சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்
பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!

பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!”

என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய

பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!