Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கூட்டம் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள தி.மு.க. தலைவரும், முதல்வருமான  மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திருச்சி செல்கிறார். இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!