இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டில்லி சென்று உள்ளார். அங்கு இன்று காலை நிருபர்களிடம் முதல்வர் கூறியதாவது:
சென்னையில் மழை வௌ்ள பாதிப்பு ஏற்பட்ட போது உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதுபோல தென்மாவட்ட மக்களயைும் பாதுகாப்போம். நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் தாமதமாகத்தான் தகவல் தந்தது. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இன்று இரவு டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரண நிதி கேட்டு பேசுகிறேன். மத்திய அரசு நிதி வழங்கினால் தான் நிவாரணப்பணிகளை முழுமையாக செய்ய முடியும். நாளை காலை டில்லியில் இருந்து தூத்துக்குடி சென்று வெள்ள பகுதிகளை பார்வையிடுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினாா்.