கடலூர் முதுநகர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் ஏசி எந்திரத்தை இயக்கியபோது, அதற்குள் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பதுங்கியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோன்று, கடலூர் அருகே கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள பால் வியாபாரி வீட்டின் குடைக்குள் 4 அடி நீளமுள்ள மற்றொரு நல்ல பாம்பு சுருண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா, இரு இடங்களிலும் இருந்த நல்ல பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.
