கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி மூன்று பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரும் சுட்டுபிடிக்கப்பட்டனர். மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இவர்கள் கோவில் பாளையம் பகுதியில் தேவராஜ் என்பவரை தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்ததை தொடர்ந்து இவர்கள் மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 50 பக்க குற்ற பத்திரிக்கையை கோவை மகளிர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன்னிலையில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர் மேலும் அதனுடன் நானூறு பக்க ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அது மட்டும் இன்றி 13 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருப்பசாமியும் இரண்டாவது குற்றவாளியாக அவரது சகோதரர் கார்த்தியும் மூன்றாவது குற்றவாளியாக தவசியும் சேர்க்கப்பட்டுள்ளனர் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

