கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 3ம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
