Skip to content
Home » கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

கல்லுாரி மாணவி கொலை.. கர்ப்பிணி மனைவியுடன் கணவன் கைது….

கோவை, பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சுஜய் (27). இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனைவி ரேஷ்மாவுடன் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரிநகரில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். ரேஷ்மா 8 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இவரது வீட்டிற்கு கல்லுாரி

மாணவி ஒருவர் வந்துள்ளார். சுஜய்க்கும் அவருக்கும் இடையே
வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி அப்பார்ட்மென்டில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து
பார்த்தபோது, சுஜயின் வீட்டினுள் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுஜயும், ரேஷ்மாவும் தலைமறைவாகினர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இளம் பெண்ணை கொலை செய்ததாக சுஜி மற்றும் ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து
போலீசார் கூறியதாவது, கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுஜயும், ரேஷ்மாவும் காதலித்துள்ளனர். இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் சுஜய் ரேஷ்மா தற்காலிகமாக பிரிந்துள்ளனர்.
இந்த சமயத்தில் சுஜய் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரை காதலித்து உள்ளார். சுப்புலட்சுமி அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுஜய் முன்னாள் காதலியான ரேஷ்மாவுடன் திருமணம் செய்து பொள்ளாச்சி டி கோட்டாம்பட்டிக்கு வந்து தனியாக குடும்பம் நடத்தி வந்தார். சுஜய்

அடிக்கடி சுப்புலட்சுமி உடன் ரகசியமாக செல்போனில் பேசியும் வந்துள்ளார்.
இந்நிலையில்தான் சுப்புலட்சுமி கடந்த 2ம் தேதி சுஜயை சந்திக்க பொள்ளாச்சி வந்துள்ளார். சுஜயின் வீட்டுக்குச் சென்ற போதுதான் சுஜய்க்கும், ரேஷ்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது தெரிந்து சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமிக்கு ரேஷ்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த சண்டையின் உச்ச கட்டத்தில் ஆத்திரத்தில் இருந்த ரேஷ்மா அருகே இருந்த கத்தியை எடுத்து சுப்புலட்சுமியின் உடலில் ஒன்பது இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் சுப்புலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சுஜயும், ரேஷ்மாவும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சுப்புலட்சுமியின் பிரேதத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்.
சுபலட்சுமியை கொலை செய்துவிட்டு தலைமறைவான சுஜய் மற்றும் ரேஷ்மாவை தேடுவதற்கென நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் இருந்த சுஜய் மற்றும் ரேஷ்மாவை தனிப்படையினர் கைது செய்தனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!