சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையைப் பணத்திற்காக விற்பனை செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, மூன்று பெண்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
