சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ பாஷ்யகார ஆதி சென்ன கேசவ பெருமாள் கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வாடகை பாக்கியை சொற்ப தொகை மட்டுமே வசூலித்த அறநிலையத்துறைக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், செப்டம்பர் 7-க்குள் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
