Skip to content
Home » கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

கொரோனா அதிகரிப்பு…. மாஸ்க் கட்டாயம்… பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

  • by Senthil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்  மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால்  மாஸ்க் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தியேட்டர், கூட்ட அரங்குகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  மாஸ்க் கட்டாயம் அணிய சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம்.

ஆஸ்பத்திரிகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஏசி வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாக கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கியிருக்கிறோம். ஏனென்றால் மூடப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதால் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அனைவரும்  மாஸ்க் அணியவேண்டும். மாஸ்க் அணிவது கொரோனாவுக்கு மட்டுமின்றி, சுவாசநோய்கள் வராமல் இருப்பதற்கும் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே  மாஸ்க் அணியவேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!