பீகார் மாநிலம், தானாபூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்ஜேடி தலைவர் மிசா பாரதி, “எந்த ஒரு வேலையை செய்தாலும் அது தன்னுடைய சாதனை என்று பெருமை தேடிக்கொள்வது பிரதமர் மோடியின் பழக்கம். தற்போது, கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகத்திற்குரிய முடிவுகள் வெளி வருகின்றன. எனவே, அவதூறுக்கு பயந்து தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் வெகு சிலருக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படலாம் என ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில் மிசாராபாரதி, தடுப்பூசி மீதான சந்தேகம் எழுந்துள்ளதால், அவதூறு ஏற்பட்டு விடும் என அஞ்சி பிரதமரின் படம் நீக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மிசார பாரதி, பீகாரின் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
