Skip to content
Home » நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி இவரது கணவர் ராஜா என்பவர் திருச்சி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார் 2017 ஆம் ஆண்டு அவர் பணி முடிந்து வீடு திரும்பும் வகையில் மணச்சநல்லூர் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார் இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி துறையூர் சார்பு நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.  வழக்கு விசாரித்த சார்பு

நீதிமன்றம் 34 லட்ச ரூபாய் வழங்க கோரி உத்தரவு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை நீதிமன்றம் போக்குவரத்துக் கழக மனுவை தள்ளுபடி செய்தது இதனை தொடர்ந்து விஜயலட்சுமி மீண்டும் துறையூர் சார்பு நீதிமன்றத்தை நாடினார் சார்பு நீதிபதி வெங்கடேசன் உத்தரவின் பேரில் இழப்பீடு வழங்காத 4-அரசு பேருந்துகளை இன்று அமீனா கணேசன் மணிகண்டன் ஆகியோர் பேருந்துகளை பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர் அரசு பேருந்து பறிமுதல் செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!