கோயில்களிலேயே பிரசாதம் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்னெடுப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், பிரசாதங்களின் சுகாதாரத் தரத்தை பக்தர்கள் நேரில் காணும் வகையில் அமைந்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த முயற்சி வெளிப்படைத்தன்மையையும், பக்தர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் எனவும் பாராட்டு தெரிவித்தது.
