இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி தொந்தரவு உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டீன் தெரணிராஜன் தலைமையில் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
முத்தரசனை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்வையிட்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.