Skip to content
Home » வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

வயநாட்டில் சிபிஎம்மை எதிர்த்து ராகுல் போட்டியிடக்கூடாது.. பினராயி விஜயன் போர்க்கொடி…

  • by Senthil

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் நேற்று நவகேரள சதசு விழாவின் 2 நாள் நிகழ்ச்சியில் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவருமான பினராயி விஜயன் கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் .. அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜனதாவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, வயநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளரை நிறுத்தும். இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அங்கம் வகிக்கிறது என்பதால், ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது இரண்டு பங்காளிகளுக்கு இடையேயான சண்டையாகவே இருக்கும். எனவே ராகுல் பா,ஜனதாவை எதிர்த்துப் போராட வேண்டும். எங்களை எதிர்த்து அல்ல. இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், “மாநிலங்களுக்கு இடையேயான அரசியல் போட்டிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல், பா.ஜனதாவின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும்” என்று நேற்று கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!