Skip to content
Home » சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

சிவகாசி….. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து…7 பேர் பலி…… பலர் கவலைக்கிடம்

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி இங்குள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம்  வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால்  பட்டாசு ஆலையில் உள்ள 10 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

அங்கு வேலை செய்து கொண்டிருந்த 7பேர் உடல் சிதறி  அந்த இடத்திலேயே இறந்தனர்.   இறந்தவர்களில் 5 பேர் பெண்கள். 2 ஆண்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் பலத்த காயத்துடன்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று  மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!