Skip to content
Home » மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை  வெளியான இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி, மிக்ஜாம் புயல்  5ம் தேதி காலை  ஆந்திராவில் தான் கரையை கடக்கும் என அறிவித்து உள்ளது. அதாவது  ஆந்திராவில் நெல்லூருக்கும்,  மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயலாகவே கரையை கடக்கும் என்றும் அறிவித்து உள்ளது.

இந்த புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின்  வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!