Skip to content
Home » தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

தீபாவளி பண்டிகை….. மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டார வள மையத்தின் கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப் பட்டது. பாபநாசம் அன்பு பேக்கரி உரிமையாளர் சீனிவாசன் பங்கேற்று, பாபநாசம் வட்டார வள மைய கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பகல் பராமரிப்பு மையத்தில் உள்ள 22 மாணவ, மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், ஆசிரியை, உதவியாளர் உட்பட உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!