Skip to content
Home » தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

தீபாவளி பண்டிகை…. அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12 தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று  தொடங்கியுள்ளது.

அரசு விரைவு பேருந்துகளை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை நவம்பர் 10 ஆம் தேதி பயணம் மேற்கொள்வார்கள். அவர்களுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. மேலும்  சனிக்கிழமை நவம்பர் 11 ஆம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று  தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர, பேருந்து நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!