பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட குமார் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
