Skip to content

வாணியம்பாடியில் பல் மருத்துவமனைக்கு பூட்டு.. அதிகாரிகள் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் பல் கிளினிக் (VTS) கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த உயிரிழந்த நிலையில்  தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நடத்திய ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய கருவியே மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியது ஆய்வில் தகவல் வெளியானதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞான மீனாட்சி ஆய்வு செய்த நிலையில் 2023 ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த (VTS – கிளினிக்) என்ற பெயரை மாற்றி அறிவு மருத்துவமனை என்ற பெயரில் மற்றொரு மருத்துவமனை செயல்பட்டு வருவதால் பல் மருத்துவர் அறிவரசன் விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி மற்றும் மருத்துவ குழுவினர் தபால் மூலம் மருத்துவரிடம் 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தபால் மூலம் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞான மீனாட்சி தலைமையிலான மருத்துவ குழுவினர் வாணியம்பாடி வட்டாச்சியர் உமாரம்யா தலைமையிலான வருவாய்துறையினர் மருத்துவமனைக்கு இன்று பூட்டு போட்டனர்.. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி செய்தியாளர்களை சந்தித்த போது.. பல் மருத்துவமனையில் ஆய்வு செய்து, 8 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து பல் மருத்துவர் அறிவரசனுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பினோம், அதற்கு அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லாததால் தற்போது மருத்துவமனைக்கு பூட்டு போட்டதாகவும், மேலும் பல் கவுன்சிலுக்கு இதுகுறித்து தெரிவித்து, இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளோம்
error: Content is protected !!