காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரில் வசித்து வருகிறார். தற்போது அடுத்த திரைப்பபட பணிகளுக்காக கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
தேசிய விருதுபெற்ற டைரக்டர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை செய்து வந்தனர்.