தஞ்சை மாவட்டத்தில் டித்துவா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது இப்போது தஞ்சை மாவட்டங்களில் மழை பொழிவு இல்லாமல் இன்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளது இந்த நிலையில் ஆங்காங்க தேங்கியுள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. செல்லுக்குறிச்சி ஏரி முழு கொள்ளளவு தாண்டி நீ நிரம்பி வாய்க்கால் மூலம் தண்ணீர் கடலுக்கு செல்கிறது. அதேபோல் தஞ்சை மாவட்ட பகுதியில் பெய்த மழை நீர் இப்போது அனைத்து பகுதிகளும் வடிந்து வருகிறது விவசாய நிலங்கள் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மீனவர்கள் புயல் சின்னம் காரணமாக ஏழு தினங்களாக கடலுக்குச் செல்லாமல் உள்ளனர் புயல் கரையை கடந்த உடன் மீன் துறை அறிவித்தவுடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதற்கு ஆயத்த பணியில் மீனவர்கள் உள்ளனர் அனைத்து பகுதிகளும் மழை நீர் வடிவதால் அதிராம்பட்டினம் கருங்குளம் நசுவினி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்கிறது.

