திமுக இளைஞரணி செயலாளர்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான’ இருசக்கர வாகன பிரசார பேரணியை 15’ஆம் தேதி கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இருசக்கர வாகன பேரணி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு வந்தடைந்தது.
இந்த இருசக்கர வாகன பேரணி திருச்சி திருவெறும்பூர் வந்ததை அடுத்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இளைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்று திருவெறும்பூர் தொகுதிக்கான பிரசாரத்தை திருச்சி – அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த பேரணி பால்பண்ணை முதல் காட்டூர் தந்தை பெரியார் சிலை
வரை செல்ல அமைச்சர் இருசக்கர வாகனத்தை இயக்க பின் தொடர்ந்த இளைஞர்கள் அணி வகுத்தனர்.
இந்த பேரணியில் மாநகர கழகச் செயலாளர்
மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், பகுதி கழக செயலாளர் நீலமேகம், தர்மராஜ், விஜயகுமார், சிவா, ஒன்றிய கழகச் செயலாளர்கள்
கே எஸ் எம். கருணாநிதி, கங்காதரன், பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு, மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.