Skip to content
Home » மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அண்மையில் புதிதாக நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்தவர்கள் இதுவரை போதிய அளவில் ஆட்களை நியமிக்கவில்லை என்பதால் பணிகள் தேக்கமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கிய நிலையில் நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் அப்புறபடுத்தவில்லை இது குறித்து டஅந்த பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் என்ன சொல்வது என தெரியாமல் தானே களத்தில் இறங்கி குப்பைகளை வீடு வீடாக சென்று அள்ளி வருகிறார் பெண் நகர்மன்ற உறுப்பினர் ஜம்ரூத் பேகம்.

நகராட்சி பகுதியான பழைய சந்தை பேட்டை, சந்தை பேட்டை கிழக்கு வீதி பகுதி யில் தேங்கியுள்ள குப்பைகளை குப்பை வண்டியுடன் தனது இரண்டு மகன்களுடன் சென்ற நகர்மன்ற உறுப்பினர் ஜம்ரூத் பேகம் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்து வருகிறார். நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை அறிவுறுத்தியும் குப்பைகளை எடுக்க ஆட்களை அனுப்பாததால் பொதுமக்கள் தன்னிடம் வாக்கு வாதம் செய்வதால் மேற்கொண்டு குப்பைகளை தேங்காமல் இருக்கவும் நகரை தூய்மையாக வைக்க திமுக நகர்மன்ற உறுப்பினரான ஜமரூத் பேகம் தனது குடும்பத்துடன் குப்பை அள்ள இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!