Skip to content
Home » டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

டில்லியில் பேரணி நடத்தி கேரள முதல்வர் போராட்டம்….. திமுகவும் ஆதரவு

  • by Senthil

மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு டில்லி ஜந்தர் மந்தரில்  நேற்று போராட்டம் நடத்தியது. முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்,உள்பட  200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அவர்கள் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தங்களின் கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர்.

இன்று டில்லி ஜந்தர் மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் கேரளா எம்.பிக்கள் போராட்டம்  நடத்தினர்.  காலையில் கேரள இல்லத்தில் இருந்து  பினராயி விஜயன் தலைமையில்  அமைச்சர்கள், எம்.பிக்கள்,  பேரணியாக வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை எடுத்து வந்தனர்.

அவர்கள் ஜந்தர்மந்தர் வந்ததும் அங்குள்ள மேடையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.  கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பேசினர்.

இந்த போராட்டத்திற்கு திமுகவும் ஆதரவு தெரிவித்தது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக சார்பில் பங்கேற்றார். அத்துடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.  போராட்டம் மாலை வரை நடக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!