பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த ராமதாஸ், அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார்.
தொடர்ந்து இன்றும் அவர் தைலாபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது”
96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று நான் சுயம்புவாக இந்த கட்சியை உருவாக்கினேன். இப்போதெல்லாம் எனக்கு தூக்கம் வருவதில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொன்னால், அதை பொய் என்கிறார் அ்புமணி. மார்பிலும், முதுகிலும் குத்தி வருகிறார் அன்புமணி. அவர் செயல் தலைவராக இருக்க ஒப்புக்கொண்டால் பாமகவில் பிரச்னை தீர்ந்து விடும். அன்புமணியை பார்த்தாலே எனக்கு ரத்த அழுத்தம் ஏறுகிது. மனக்குமுறல் ஏற்படுகிறது. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார் அன்புமணி.
என் மூச்சு உள்ளவரை நான் தான் தலைவர். நான் தான் இந்த கட்சியின் நிறுவனர். என் குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரக்கூடாது என்று ொன்னேன். அதை என்னால் காப்பாற்ற முடியவில்லை. விரைவில் பாமக இளைஞர் அணிக்கு பொருத்தமான தலைவர் நியமிக்கப்படுவார். இரண்டரை வருடத்திலேயே மத்திய அமைச்சர் பதவியில் தன்னால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்று கூறியவர் இந்த அன்புமணி.
பாட்டிலை தூக்கி அடிப்பது தான், பெற்ற தாயை மகிழ்ச்சியாக வைத்திருப்பதா? மாநாட்டிற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 2026க்கு பிறகு இவருக்கு கட்சிப்பதவியை வழங்குவேன் என கூறியதை கட்சியினர் ஏற்கவில்லை. என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன்
இவ்வாறு அவர் கூறினார்.