Skip to content

கரூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணுர்வு பேரணி

  • by Authour
கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத் துறை மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவள்ளுவர் திடலை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர். தொடர்ந்து பேரணி நிறைவில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ, மாணவிகள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள் ஏற்றனர்.
error: Content is protected !!