Skip to content
Home » எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

எதப்பத்தியும் கவலைப்படாத அமலாக்கத்துறை… ஆஸ்பத்திரியிலேயே விசாரணை..

கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் ஆகியோரும், செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதாடினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:- அமலாக்கத்துறை மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்…  செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் அறிய வேண்டி உள்ளது. எனவே, செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்.  இதனைத் தொடர்ந்து வக்கீல் என் ஆர் இளங்கோ .. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக… சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்றார்.   அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அல்லி அறிவித்தார். அதன்படி, வரும் இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போது சிகிச்சை பெற்று வரும் காவேரி ஆஸ்பத்திரியிலேயே வைத்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!