மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடக்கிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் 4 பேரும், அதிமுக கூட்டணி சார்பில் 2 பேரும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
அதிமுகவில் ஒரு சீட்டை கூட்டணி கட்சிகள் கேட்டு வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று அளித்த பேட்டியில், அதிமுக பேசியபடி சீட் தருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி உள்ளார்.
பாமக, பாஜக ஆகிய கட்சிகளும் சீட் கேட்டு வருகிறது. உள்கட்சியிலும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். அதில் அதிமுகவில் தற்போது பொதுச்செயலாளர் என்று யாரும் இல்லை. எனவே எடப்பாடி கையெழுத்து போட்டு வேட்பாளராக அறிவிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் அதிமுக வேட்பாளர் என ஏற்க கூடாது என்று அதில் கூறி உள்ளார்.
புகழேந்தியின் இந்த மனுவால் ராஜ்யசபா தேர்தல் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
