திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் செல்லையன் (68) என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விவசாய நிலத்துக்குச் சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், உயிரிழந்த செல்லையனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
