திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (75).இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (81).என்பவர் கிருஷ்ணமூர்த்தி உடன் மது போதையில் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினார்.இதில் கிருஷ்ணமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது.அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இதுகுறித்த புகாரியின் பெயரில் ரங்கசாமி மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

