ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், பின்னர் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துச் சென்றதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
