ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட பொள்ளாச்சி வன கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வன சரகங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசிக்கின்றன.பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு யானைகளுக்கான தனித்துவமான கணக்கெடுப்பு தற்போது நடைபெறுகிறது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனச்சராக அலுவலர்கள், வனக்காப்பாளர்கள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்கள் வன பகுதிக்குள் 15 கிலோமீட்டர் நடந்து சென்று நேரடியாக யானைகளை கணக்கிட்டு பதிவு செய்வர்.இரண்டாம் நாளான நாளை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நேர்கோட்டு பாதையில் நடந்து யானைகளின் சாணம் வாயிலாக மறைமுக கணக்கெடுப்பும்,இறுதி நாளான நாளை மறுநாள் இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் அருகில் இருந்து நேரடியாக யானைகளை பார்த்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும் என ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குனர் பார்கவ தேஜா தெரிவித்துள்ளார்,பொள்ளாச்சி வனச்சரக கூட்டத்துக்குட்பட்ட வில்லோணி பீட் பகுதியில் வனத்துறையினர் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.