Skip to content
Home » 5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

5 மாநில தேர்தல் கருத்துகணிப்பு.. காங்-2, பாஜ-1, இழுபறி-1

  • by Senthil

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவ் ஹாட்ரிக் வெற்றியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் தெலுங்கானாவில் முக்கோணப் போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ் 58,காங்கிரஸ் 56, பாஜக 10 இடங்களை பெறலாம் என சி.என்.என்ற செய்தி நிறுவனம் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் 49 -59, பி.ஆர்.எஸ் 48-58, பாஜக 5-10 மற்றவை 6-8 இடங்களை பெறலாம் என டிவி9 என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஜான்கீ பாத் கருத்துக்கணிப்பில் பாஜக 100 முதல் 123, காங்கிரஸ் 102-125, ரிபப்ளிக் டிவி பாஜ 118-130, காங்கிரஸ் 97- 107, டிவி 9 பாஜ 106- 116, காங்கிரஸ் 111-121 தொகுதிகளை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் ஜான்கீ பாத் கருத்துக்கணிப்பில் பாஜ 100- 122, காங்கிரஸ் 62- 85,வி மார்க் பாஜ 101- 125, காங்கிரஸ் 69-81, டைம்ஸ் நவ் பாஜ 108- 128, காங்கிரஸ் 56-72 தொகுதிகளை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் இண்டியா டிவி கருத்துக்கணிப்பில் பாஜக 40 -50, காங்கிரஸ் 36- 46, ஏபிபி பாஜக 36-48, காங்கிரஸ் 41-53, ஜான்கி பாத் பாஜக 34-45, காங்கிரஸ் 42- 53 தொகுதிகளை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் மிசோரமில் சோரா மக்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!