Skip to content
Home » குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14) மற்றும் தரண்யாஸ்ரீ (11) என‌ இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பன் தினந்தோறும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.‌

இந்நிலையில் நேற்று இரவும் ஐயப்பன் மது குடித்துவிட்டு வந்து சுசிலாவுடன் பிரச்சனையில் ஈடுபட்டு அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சுசிலா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரது வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இன்று அதிகாலை சுசிலாவின் கணவர் ஐயப்பன் எழுந்து பார்த்தபோது சுசிலா உத்திரத்தில் சுடலமாக தொங்கி உள்ளார். பின்னர் ஐயப்பன் அவரது இரண்டு குழந்தைகளையும் எழுப்பி தகவலை சொன்ன நிலையில், அவர்கள் சுசிலாவின் சடலத்தை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குடி போலீசார், சுசிலாவின் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுசிலாவின் உயிரிழப்புக்கு அவரது கணவர் ஐயப்பன் தான் காரணம் என்றும் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து பிரச்சனையில் ஈடுபட்டதால் தான் கணவன் கொடுமை தாங்காமல் சுசிலா  தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இதனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அதனால் சுசிலாவின் கணவர் ஐயப்பனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சுசிலாவின் சகோதரர் செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் ஆலங்குடி போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!