தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெரியாமல் மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த யோவான் (45) தனது தோட்டத்திற்கு சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. மேலும் இச்சம்பவ தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
