குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் இருந்த பிரதீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரிடம் மன்னிப்பு கேட்டு அவர் எழுதிய கடிதத்தை மீட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

