Skip to content
Home » வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது இல்லத்தில்இருந்து வெளியே வர இயலாதபடி சிக்கித் தவித்தார்.

3 நாட்களாக தனது வீட்டிலேயே சிக்கியிருந்த நிலையில், அவரை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் இன்றுமீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக சொந்த ஊர் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு மாட்டிக்கொண்டு 3நாட்களாக சிக்கித் தவித்தார். அவரையும் சேர்த்து   மீட்பு படையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!