தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் தொடக்கத்திலும், 3வது வாரத்திலும் அடுத்தடுத்து கனமழை காரணமாக வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதில் 50 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. வெள்ள சேதத்தை மத்திய குழுவினர், அமைச்சர்கள் வந்து பார்வையிட்டனர். தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரினார். ஆனாலும் வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியை மட்டுமே ஒதுக்கிய மத்திய அரசு வெள்ளபாதிப்புக்கு இதுவரை நிதி ஒதுக்கவில்லை.
தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்கு ரூ. 8 ஆயிரம் கோடி உடனே ஒதுக்க வேண்டும் என ேக. கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இது நிர்வாகம் சம்பந்தப்பட்டது. நிதி வேண்டும் என்றால் அதை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும் என்று அதில் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.