மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் பதவியில் இருந்தபோது, அதிகாரத்தை பயன்படுத்தி சுமார் ரூ.380 கோடி அளவிற்கு சட்டவிரோதமாக சொத்து குவித்ததாகவும், சொத்து விவரங்களை அறிவிக்க தவறசியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த நிலையில் ரூ.71.10 லட்சம் பிணை தொகையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
