Skip to content
Home » நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

நிதி நிறுவனம் நடத்தி மோசடி… 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை….

  • by Senthil

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நம்பி பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். பின்னர் கொடுக்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் இந்த நிறுவனம் மொத்தம் ரூ.63 லட்சத்து 72 ஆயிரத்து 600 மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரம் சிவக்குமார் (வயது 41), முருகேசன், லட்சுமி (32), தீபா (34), விமலா (38), பிரியா (46) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் கோர்ட்டுக்கு வந்து இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், லட்சுமி உள்பட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். அதில் ரூ.63 லட்சத்து 72 ஆயிரத்து 600-ஐ பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!