Skip to content
Home » திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.  நாளை (வியாழக்கிழமை) மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு  கிரிவலம் நிறைவடைகிறது. எனவே நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள்  செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!